×

தா.பேட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

 

தா.பேட்டை, ஏப். 29: தா.பேட்டை அடுத்த ஊரக்கரை கிழக்குதெரு பகுதியில் வசித்து வந்தவர் ஜோதி (50). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைத்த ஜோதி தா.பேட்டை செல்லும் சாலையில் ஏரிக்கரை சீமைக்கருவேல முள் மரத்தில் கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி ராணி தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் ஜோதி உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post தா.பேட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tha. Pettah ,Tha Petty ,Jyoti ,East Street ,Tha.pet ,
× RELATED ராஜிவ் காந்தி ஜோதி யாத்திரைக்கு...